Friday, April 29, 2016

இராவண காவியம் - 2 - தமிழகக் காண்டம் - தமிழகப் படலம்

இராவண காவியம் - 2 - தமிழகக் காண்டம் - தமிழகப் படலம்


இராவண காவியத்தில் முதல் காண்டம் - தமிழகக் காண்டம். இதில் தமிழகப் படலம் ,மக்கட்ப் படலம், தலைமக்கட்ப் படலம், ஒழுக்கப் படலம், தாய்மொழிப் படலம், கடல் கோட் படலம், இலங்கைப் படலம் என 7 படலங்கள் உள்ளன. முதல் படலமான தமிழகப் படலம் 97 பாடல்களுடன் தமிழத்தின் அமைப்பு, பெருவள நாடு, தென்பாலி நாடு, திராவிட நாடுகளின் எல்லைகளையும் அதில் அமைந்துள்ள ஐந்திணை நிலங்களின் வளங்களையும் கூறுகிறது. 

தமிழகம்:

பழந்தமிழ் காலத்தில் தமிழகம் இன்றுள்ளது போல குறிகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கவில்லை. வடக்கி பனி மலை (இமயம்) வரை விரிந்திருந்த தமிழகம் 
பின்னர் ஆரியர் வந்த பின் விந்திய மலையை வடக்கு எல்லையாகக்
கொண்டிருந்தது.தென் எல்லை, தென்கடல் நிலமாய் இருந்ததால் இன்றுள்ள குமரி முனைக்கு தெற்கே ஆயிரம் கல் தொலைவுக்கு மேல் நீண்டிருந்தது, கிழக்கில் வங்கக் கடலும், சாவகத் தீவுகளும் ஒரே நிலப் பரப்பாயிருந்தது. அட்தென்னிலத்தில் குமரி மலையும், பனி மலையும் ஓங்கி உயர்ந்திருந்தது.குமரி மலையில் குமரியாறும், பனி மலையில் பஃறுளியாறும் ஓடி அந்நிலப் பகுதியை வளமாக்கியிருந்தன. இந்த இரு ஆறுகளுக்கும் இடையே இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை அமைந்திருந்தது.

பெருவள நாடு:

குமரியாறுக்கும், பஃறுளியாறுக்கும் இடைப்பட்ட பகுதி பெருவள நாடு எனப்பட்டது. செழித்து இருந்தது. பெருவள நாடானது 1000 கல் தொலைவு அளவு பரப்புடையதாய் பெயருக்கேற்றார் போல பிற நாடுகள் செல்வம் கடன் கேட்க்கும் அளவிற்கு செல்வ வளம் தாங்கிய குமரி மலையைக் கொண்டிருந்தது. வின்முகிலில் மோதும் அளவு உயந்திருந்த அக்குமரி மலையிலிருந்து தோன்றிய குமரியாறு குமரி முனையிலிருந்து 200 கல் தொலைவுக்கு பாய்ந்து வளம் செய்து கொண்டிருந்ததது. குமரியாரிலிருந்து தெற்க்கே 500 கல் தொலைவில் மழை வளம் பெற்று பஃறுளி என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது. 

ஏழ்குணகரை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ் குறும்பனை நாடு, ஏழ் தொங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு என 49 நாடுகளைக் கொண்டிருந்தது பெருவள நாடு. 

தென்பாலி நாடு:

பஃறுளி ஆறுக்கும், தென் கடலுக்கும் இடைப்பட்ட 500 தொலை கல் பரப்பளவில் பவழங்கள், முத்துக்கள், மற்றும் வளமான பொருட்களோடு இருந்த நாடு 
தென்பாலி நாடு ஆகும். இந்த மூன்று பகுதிகள் சேர்ந்ததே குமரிக் கண்டம் என அழைக்கப்பட்டது. 

திராவிடம்:

பெருவள நாட்டிற்கும், விந்திய மலைக்கும் இடையே உள்ள பகுதி 'திராவிடம்' என அழைக்கப்பட்டு அது தென்னகத்தின் வட எல்லையாக விளங்கியது. கோதாவரி, கிருட்டினா, பெண்ணை, பாலாறு, அகண்ட காவிரி, பாவனி, வையை, பொருநை போன்ற ஆறுகள் ஓடிய நாட்டில் மலை வளம், காட்டு வளம்,வயல்கள் நிறைந்த மருத நிலம், கடல் வளம் என அனைத்தும் செழிப்பாய் இருந்தன.

குறிஞ்சி:

மலையும் மலை சார்ந்த பகுதிகளும். அம்மலையில், பசுங் கிளி இனிய இசை பாட, அதைக்கேட்டு மயில் தோகை விரித்தாட, கிளைகளிலிருந்து குரங்குக் கூட்டம் மருண்டு பார்க்கும். மலையிலே பொழியும் மழை மிகுதியால் குளிர் வாட்டுவதனால் தத்தம் துணைவர்களோடு உயிர் மகிழும் வண்ணம் நள்ளிரவில் மெய்கலந்து உறவாடி இன்பமுற, அன்பு மிகு காதலர்கள் இருக்கும் இடமாய் இருந்தது.

முல்லை:

காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். மைனாவும் குயில்களும் அழகிய சிறகுகள் உடைய வண்டுகளும் பரவும் இசை ஒலிக்க, மா, பலா, வாழை 
ஆகிய முக்கனிகளும், தேனும் தரும் இனிமையை நல்கிப் புகழ் பெறும் காட்டு இடையர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகிய மூன்று குழல்களினால் இசைத்து மேய்கின்ற பசுக் கூட்டங்கள் அனைத்தையும் ஒன்றாய் மேய்ப்பார்கள். கார் காலம் நெருங்க, மாலையில் காடு சென்ற தலைவர்களின் வரவினை எதிர்நோக்கி ஆயர் குலப் பெண்டிர் வீட்டின் முன்பகுதியில் இருந்து காத்திருக்கும் 
காட்சிகள் நிறைந்தாய் இருக்கும் முல்லை நிலம்.

பாலை: 

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்தது பாலை நிலம். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். அவ்வெப்பத்தில் ஆண் யானையின் தும்பிக்கையைப் பிடித்தவாறே பாதங்கள் வெப்பத்தால் பதை பதைப்ப பெண் யானை நடந்து வரும். இளைப்பாற இடம்மில்லாத சென்னாயின் இளங்குட்டி தன் தாயின் நிழலியே நிற்கும். புறாக் கூட்டம் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பருக்கைக் கல்லை விழுங்கும். 

மருதம்:
வயலும், வயல் சார்ந்த இடமும். மலையிடை பிறந்த ஆறுகள் விளையும் நெல்லையும், கரும்பையும் காப்பாற்றும்.கால்வாய்க்கிடையில் காஞ்சி, வஞ்சி, மருதம் ஆகிய பூக்கள் பூத்து இருக்கும்.

கம்பன், "தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளை கண் விழித்து நோக்கத்"-னு கோசல நாட்டு மருத நிலத்தைப் பாடியிருப்பான். அதற்குச் சற்றும் குறைவில்லாமல் புலவரும், 

"சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல்
நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல்
தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும்
ஏற்றினை யுகைப்பா ரேற்றி னிகல்வலி யுழுநர் வாழ்வே
." ஆறு சீர் விருத்தத்தில் பாடியிருக்கிறார். 

வயலின் கண் சேற்றினை உழுது பண்படுத்துவர் ; அங்கே செந்நெல் விதைப்பர், நாற்று நடுவர், நாற்றின் நடுவே முளைத்த களைகளைக் களைவர். 
விளைத்து முற்றியபின் கதிர் அறுப்பர் ; தூற்று முடிகளைக் கட்டாகக் கட்டி அதனை சுமத்து செல்வர், பின் எருதுகளை விட்டுச் சுற்றிவரச் செய்து 
போரடித்து நெல்மணி சேர்ப்பர். 

நெய்தல்: 

கடலும் கடல் சார்ந்த இடமும். பொன் போன்ற நிறமுள்ள மலர் பூக்கும் தூய புன்னை மரங்கள் நிறைந்து கடற்கரையின் கண்ணே நீர்ப்பகுதியில் வலிய
முதலை நிறைந்து வாழும். உப்பங்கழியில் இணைபிரியாத வாழும் "மகன்றில்" என்னும் ஒருவகைப் நீர்ப்பறவை தன் துணையோடு தாழை மடலிலே அமர்ந்து 
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். 

(தொடரும்)

No comments:

Post a Comment