Monday, June 15, 2015

என்னவளே..அடி என்னவளே

என்னவளே..அடி என்னவளே...

இன்றோடு எங்கள் திருமண வாழ்வின் ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டு தொடங்குகிறது. திரும்பிப் பார்த்தால் எங்கே/எப்படிப் போனது என்ற கேள்விதான் வருகிறது. 2008 மார்ச்சில் பார்த்து, ஏப்ரலில் நிச்சயிக்கப்பட்டு, ஜூன் 15 அன்று கோவையில் நடந்தது எங்கள் திருமணம். அன்று முதல் இன்று வரை சிறிய/பெரிய பகிர்வுகள், மகிழ்ச்சியான பல நிகழ்வுகள், அனீக் & அயான், ஊர் சுற்றல்கள், கோபம் கொப்பளிக்கும் பல சண்டைகள் மற்றும் அதன் பிறகான குரலை மௌனித்துக் கொண்டு செய்யும் சமாதான முயற்சிகள் எனச்  சொல்லிக்கொண்டே போகலாம்.


இங்க இதை நான் சொல்லியே ஆகனும் (ஆமா, சூரியாவேதான் )..
எங்கள் இருவர்க்கும் ஒத்த ரசனைகள் என்பதெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறன். ஆனாலும் மகிழ்ச்சியாய் போய்க் கொண்டிருக்கிறது வாழ்கை..

நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன், எதுக்கு புக் வாங்கி இடத்தை அடைக்கிற -> இது அவள். (திருமணத்திற்கு முன் நான் கொடுத்த Message In a Bottle  இன்னும் படிக்கவில்லையெனக் கேள்வி ), நான் மெலடி , அவள் டங்கா மாரி ; எனக்கு ஹோட்டல் சென்று வித விதமாய் சாப்பிடப் பிடிக்கும் அவள் -> I only eat Indian food ; எனக்கு தமிழ் சினிமா, அவளுக்கு ஹிந்தி சினிமா ;எதுவும் perfect-ஆக இருக்க வேண்டும் அவளுக்கு, எனக்கு எங்கயாவது இருந்தால் சரி (கொஞ்சம் சோம்பேறி நான்) ; கிடைக்கும் நேரத்தில் தூங்கலாமா நான்? அப்போ வேற பண்ணலாம் அவள் ; சிறிய பயணமோ, இந்தியா பயணமோ ஒரு மாதத் திட்டமிடல், ஷாப்பிங், packing  என checklist போட்டு மிகச் சரியாய் செய்பவள் அவள். நான்லாம் ஆபீஸ் போயிட்டு ஹி..ஹி மொபைல வீட்டுல வைச்சுட்டேன் என்பேன், டிபன் பாக்சை ஆபீஸிலோ/ ட்ரைனிலோ விட்டு விட்டு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வேன் ; ஓவ்வொரு முறையும் வெளியூர் பயணத்தின் போது ஹோட்டல் அறைக்கு தலைவலியுடன் திரும்பி வரும் போது, எனக்குத் தெரியும் அதுதான் மாத்திரை எடுத்து வைத்தேன் உன்னோட பெட்டில என்பாள். சிறிய பிரச்சனை - சளி பிடித்துக் கொண்டு விக்ஸ் தேடிக்கொண்டு இருப்பேன் இந்தியாவில் இருந்து அந்த செல்பில் கிரே டப்பாவில் இருக்கு எடுத்துக்கோ என்று கேசுவலாகச் சொல்வாள். அப்பிடி ஒரு பெர்பெக்ட்..பசங்க விசயத்தில் ரொம்பக் காறார் , நான் நிறைய செல்லம் கொடுப்பேன். உன்னால்தான் பசங்க கேட்டுப் போறாங்க என்பது எனக்கு அடிக்கொருமுறை கிடைக்கும் பாராட்டு.

அனீக்கின் படிப்பு, குமான், நீச்சல் இன்னபிற முயற்சிகளுக்கும்/வெற்றிக்கும் நிச்சயம் ஷபனாதான் காரணம்.  வாரநாட்களில் பசங்களைத் தயார் செய்து பள்ளியில் விட்டு என்னை மெட்ரோ ஸ்டேஷனில் விட்டு மாலை வகுப்புக்கு அழைத்துச் சென்று, என பல நூறு வேலைகளைச்  செய்தாலும் வாக்கிங், ஜிம் என ஆரோயோக்கியசாமியாக இருப்பாள் (நான் நாள் முழுவதும் உட்கார்ந்துவிட்டு ரொம்ப tired என அலுத்துக் கொள்வேன்.). வார இறுதியில் பாஸ்கெட்பால் விளையாடக் கூட்டிப் போவது மட்டுமே எனக்கு ஒதுக்கப்பட்டது.

பல்வேறு ஆசைகள், கனவுகள் உண்டு அவளுக்கு..ஆனாலும் அது வேண்டும், இதை வாங்கு என்றேல்லாம்  கேட்பது இல்லை..ஆசையாய் ஏதேனும் வாங்குவாள், இரண்டு நாள் போனதும், இல்லை எனக்கு வேண்டாம் எனத் திருப்பிக்கொடுத்து விடுவாள். சரியான பட்ஜெட் பத்மாவதி :)). பசங்க விசயத்தில் மட்டும் சமரசம் கிடையாது.

ஆபீசிலிருந்து பேசும் போது ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க என்ற கேள்விக்கு,  அங்க இருந்து என் முகம் உனக்கு எப்பிடித் தெரியும் எனக் கேட்டால் அதுதான் உன் குரலே சொல்லுதே என பதில் வரும். ஏதேனும் யோசித்துக் கொண்டிருத்தால் என்ன யோசிச்சிட்டே இருக்க? எதுனா பிரச்னையா ? என்ன ஹெல்ப் வேணும் ? என வரிசையாக் கேள்வி வரும். எப்பிடித்தான் கண்டுபிடித்து விடுகிறார்களோ !!

தி.மு பல்வேறு கனவுகளுடன் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து கூட்டுக்குள் அடைத்து விட்டேனோ என அடிக்கடி நினைப்பதுண்டு. அவள் அது பற்றிலாம் கவலை இல்லாமல் தனக்கென்று நண்பர் குழு அமைத்துக் கொண்டு சுகந்திராமய் இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே  சொல்லுவாள். Surely she is an independent..நான்தான் ரொம்ப dependent.. அவளின்றி ஒரு வேலையும் ஓடாது என்றே நினைக்கிறேன். வாழ்க்கையின் இறுதியில் நான் அவளுக்கு முன்னே போய் விடவேண்டும் என்ற சுயநலச் சிந்தனையும் உண்டு.

இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து  இந்தப் பதிவைப் பார்க்கும் போதாவது நான் கொஞ்சம் மாறி இன்னும் equal partner ஆகவேண்டும் என்பதே என் ஆசை. அவள் கெட்டிக்காரி, சரியான திசையில்தான் போய்க்கொண்டு இருக்கிறாள். நாங்கள் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்போம் வரும் காலங்களில்...

அன்புடன்,
ஆசிப்.

4 comments: