Friday, December 26, 2014

ஈருடல் ஓருடல் ஆனது !!

வணக்கம் நண்பர்களே !!

சங்க இல்லக்கியப் பாடல்கள் அனைத்தும் திணை வாரியாகப் பிரிக்கப்பட்டவை. திணைகள் ஐந்து வகைப்படும் . நெய்தல், முல்லை, மருதம், குறிஞ்சி, பாலை. இவை தவிர கைகிளை மற்றும் பெருந்திணை என்ற இரண்டும் உண்டு. முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும். இவைகள் நிலம்  சார்ந்து பிரிகப்பட்டவை என்றாலும் இவற்றின் உரி பொருட்கள் இதன் தன்மைகளை கூறும்.

குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் - தலைவனும் தலைவியும் கூடி இருப்பது. 
பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்  - தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து இருப்பது.
முல்லை -  (காத்து)  இருத்தலும் இருத்தல் நிமித்தமும்  - பிரிவை ஆற்றி இருத்தல்
நெய்தல் - (துன்பத்தில்) இரங்குதலும் இரங்குதல் நிமித்தமும்  - பிரிவை எண்ணி இரங்கி இருத்தல்.
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்  - தலைவன் தலைவிக்கிடையே ஊடல்.

எனக்குக் குறிஞ்சித் திணையை விட மருதம் ரொம்பப் பிடிக்கும் ; மருதம்னா ஊடல்னு சொல்லிட்டோம் ; simpleல சொன்ன புருசன் - பொண்டாட்டி சண்டை ;பொண்டாட்டி எதுக்கு சண்டை போடுறா ? புருசன்காரன் அவள விட்டுட்டு வேற ஒருத்திக் கிட்ட போய்டான் ; அவன் அங்க போய்ட்டானு அவன  பப்ளிக்கா திட்டுவா ; இல்லனா அந்த பொண்ணப் பாத்த அவகிட்ட சண்டை போடுவா ; இல்ல புருசன் திருந்தி வந்தா அவன்ன வாசப்படியிலேயே நிக்க வைச்சு நாக்கப் புடிங்கிக்கற மாதிரி கேள்வி கேட்டு சண்டை போடுவா ; இதலாம் பாட்டுல வந்தா அதுதான் மருதத் திணைப்பாடல்கள் ; so, இந்தத் திணைப்பாடல புதுசா ஒரு பாத்திரம் வருது ; இந்த சண்டைக்கெல்லாம் காரணமா ; அவதான் "பரத்தை" ;

பரத்தைக்களில் "இல்-பரத்தை" , "நயப்புப் பரத்தை", "காமக் கிழத்தி" அப்பிடினுலாம் type இருக்குது ; அத அப்புறம் பாக்கலாம் ; இன்னிக்கு ஒரு பாட்டு பாக்கலாம் குறுந்தொகைல இருந்தது.

"பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி, அவன்
நல் அகம் சேரின், ஒருமருங்கினமே"

குறுந்தொகை (#370)
பாடியவர்: வில்லக விரலினார்
திணை: மருதத் திணை
சூழல்: கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டபரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. ( ஒரு கணவன், தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தி(பரத்தை)யுடன் வாழ்கிறான். இதனால், அவனுடைய மனைவி அந்தப் பரத்தையை இழிவுபடுத்திப் பேசுகிறாள், இதைக் கேட்டுக் கோபமுற்ற பரத்தை இப்படிச் சொல்வதாகப் பாடப்பட்ட பாட்டு ).

ஐந்தே வரிகள்தான் ; ஆனால் ஆழமானக் கருத்துகள் ; இந்த மாதிரியான அருமையானப் பாட்டை எழுதியது யாருன்னு தெரியல ; அதுனால பாட்டுல வரும் ஒரு நல்ல வார்த்தையைக் கொண்டு பாடியவர் பெயர் வைச்சாச்சு ; அதுதான் வில்லக விரலினார்.

பொய்கை=இயற்கையாய் உருவான நீர்நிலை (வெட்டிய குளம் இல்லை) ; ஆம்பல்=அல்லிப் பூ ; கொழு  = நல்ல செழிப்பான;  முகை=அரும்பு ;மருங்கு=உடல், பக்கம்

Direct Meaning: 

குளத்தில் ஆம்பல் அரும்பியுள்ளது. அழகான நிறத்தைக் கொண்ட அந்தக் கொழுத்த அரும்புகளை வண்டுகள் ஊதித் திறந்து மலரவைக்கின்றன. அப்படிப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துறைகளைக் கொண்டவன் என் காதலன். அவனோடு வாழும்போது, நாங்கள் ஈருடல், ஓருயிர் ஆனோம். அவனோடு இணையும்போது, வில்லை அழுத்திப் பிடிக்கும் விரல்களைப் போல் ஒருவரோடு ஒருவர் இறுகப் பொருந்தி, ஒரே உடலாகவும் மாறிவிடுகிறோம்.

Indirect Meaning: 

ஆம்பல் மலரை வண்டு தேடிச் செல்வது பரத்தையைத் தேடிச் செல்லும் தலைவனுக்கு  உவமை ஆகிறது. ( ஆம்பல் =>அல்லிப் பூ = பரத்தை ; வண்டு = தலைவன் ) ; இவன்தான் அவளைத் தேடித் போறான் ; அவ மேல எந்தத் தப்பும் இல்ல ; எப்பிடின்னு கேக்குறிங்களா ?? அடுத்த வரியைப் பாருங்க ; 
வண்டு வாய் திறக்கும் ;  அந்த செழிப்பான அல்லிப் பூ அரும்பு இயற்கையா விரிவதற்கு முன்னால இந்த வண்டு வந்து சூடேத்தி செயற்கையா முன்கூட்டியே விரிக்கப் பாக்குது. அதுதான்  "வண்டு வாய் திறக்கும்".. புரிஞ்சுதா :))

இதுதான் first ballலேயே சிக்ஸ் அடிக்குறது ; அடுத்த வரியைப் பாருங்க இன்னொரு  சிக்ஸர் ; 

அவனும் நானும் என்னோட வீட்டுல சும்மா இருக்கும் பொது இரண்டு உடல்களாக இருப்போம் ; அவனோடு கூடும் போது , வில்லை வளைத்து அம்பை விடும் பொது எப்பிடி கட்டை விரலும் , ஆட்காட்டி விரலும் ஒன்றோடு ஒன்று இறுக்கமாக இறுக்கி இருக்கோமோ அந்த மாதிரி ஒன்னாகி ஒரே உடலாக மாறிடுவோம்.. :)))

அது சரி, இங்க ஏன் வில்லை உவமையாகச் சொல்லுறார் ?? ஒரு வில்/அம்பு எடுத்து விட்டுப் பாருங்க உங்களுக்கே தெரிஞ்சிடும் ; 


வில்லை நல்லா வளைத்துத்தான் நாண் எத்தனும் ; ஒரு கை வில்லோட வளைவைப் பிடிச்சு இருக்கணும் ; இன்னொரு கை நாணனை இழுக்கணும் ; அவளை வளைக்கனும் ; உணர்ச்சி நரம்பை சுண்டி இழுக்கணும் ; ஒரே நேரத்துல ; அதே நேரத்துல விட்ட அம்பும் குறித் தவறக் கூடாது ; :))))) நான் இங்கயே நிறுத்திக்கிறேன் ... இதுக்கும் மேல போனா அடி விழும் ; 




பாட்டோட கடைசி வரி ; இப்பிடி இருக்கிற என்னை அவன் விட்டுட்டு நல் அகம் (உன்னோட வீட்டுக்கு ) போயிட்டானா நான் ஏக்கத்துல ஒரு உடல் ஆகிடுவேன் ; 

என்னத்தான் தலைவி பரத்தையைத் திட்டினாலும் அவ தலைவி வீட்டை நல அகம் அப்பிடின்னு சொல்லுறா ; அவன் அங்க போயிடாலும் அவனையே நினைச்சுட்டே வாழ்ந்துருவேன் அப்பிடின்னு 
சொல்லுறா ; 


இதுல யாரு நல்லவங்க ?? தலைவியா ? பரத்தையா ??நீங்களே முடிவு பண்ணிக்கங்க !! 

நன்றி
ஆசிப் 

No comments:

Post a Comment