Friday, December 12, 2014

தொல்காப்பியம் - மரபியல் கூறும் உண்மைகள்

வணக்கம் !!
என்ன கேள்வி கேட்டு இருந்தானா , "தாவரங்களுக்கு உயிர் உண்டுன்னு" கண்டு பிடிச்சுது யாரு ? எல்லாரும் சொன்னங்க "ஜெ.சி.போஸ்" அப்பிடின்னு. சரி ; ரொம்ப சரி ; ஆனா எப்ப கண்டு பிடிச்சாரு ? 1900-ல. 

நான் என்ன சொல்லுரன்னா 2௦௦௦ வருசம் முன்னாலேயே நம்ம தொல்காப்பியர் இத சொல்லிடாரு.   


இவன் தமிழ் ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சுனுதானே நினைக்குரிங்க.. ஆனா அதுதான் உண்மை. அப்பிடி என்னதான் சொல்லிஇருக்காருன்னு பாக்கலாமா?

தொல்காப்பியம் => 3 அதிகாரங்கள் => சொல் , எழுத்து , பொருள் ; 
1 அதிகாரம் => 9 இயல்கள் ; 

அதுல பொருளதிகாரத்துல இருக்குற மரபியல்தான் நமக்கு இப்ப வேணும். இது தமிழர் வாழ்வியல் மரபுகளைக் கூறுவது. இதுல இருக்க செய்யுள் 571 to 578 மட்டும் நாம இப்ப பாக்கலாம்

571 - >  இதுல தொல்காப்பியர் ஒரு அறிவு முதல் ஆறு அறிவு உடைய உயிரினங்களை வகைப்படுத்துகிறார். 

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

ஓரறிவு - > உடம்பால் உணர்வன ; 
ஈரறிவு -> உடம்பு & நாக்கால் உணர்வன ; 
மூன்று அறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கால் உணர்வன ; 
நான்கறிவு - உடம்பு, நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வன ;  
ஐந்தறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காதால் உணர்வன ; 
ஆறறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது , மனசு ; 

572 -> ஓரறிவு உயிரினங்கள் ஏதுன்னு இதுலதான் சொல்லுறாரு 

புல்லும் மரனும் ஓர் அறிவினவே;                             

பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.


புல்லும் , மரமும் ஓர் அறிவு கொண்டவை. புல்லுனா அருகம் புல், கோரைப் புல் மட்டும் இல்ல. தென்னை, பனை. பாக்கு, மூங்கில், வாழை, முருங்கை இது எல்லாமே புல்தான். மா மரம், ஆல மரம் அது மாதிரிலாம் மரம்-ல சேரும். 

சரி ; எது மரம் ? எது புல் ? அதுக்கு ஒரு கணக்கு சொல்லுறாரு தொல்காப்பியர். 
வைரம் பாய்ந்து உறுதியாக இருப்பது மரம் ; மற்றவை = புல் ; 

அடுத்த வரியை பாருங்க : "பிறவும் உளவே" == மரம் , புல் மட்டும் இல்ல ; இன்னும் கொஞ்சம் ஓரறிவு உயிர்கள் உள்ளன ; 

தாமரை , கழுநீர் -> இந்த ரெண்டும் ஓரறிவு உயிர்தான் ; தாமரை தெரியும் ; அது என்ன கழுநீர் ?? குளத்துல தேங்கி நிக்கிற தண்ணில இருக்க "பாசி". 

இப்ப சொல்லுங்க தாவரங்களுக்கு உயிர் உண்டுன்னு கண்டுபிடிச்சது யாரு?? 

மத்த செய்யுள்ளும் பாத்துருவோம். 

573 -> ஈரறிவு உயிரினங்கள் ஏதுன்னு இதுல சொல்லுறாரு

நந்தும் முரளும் ஈர் அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.


நத்தை , சங்கு, சிப்பி, கிளஞ்சில் => ரறிவு உயிரினங்கள்

574 -> மூன்றறிவு உயிரினங்கள்:

சிதலும் எறும்பும் மூ அறிவினவே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.


ஈசல்எறும்பு ; "பிறவும் உளவே" => அட்டை போன்றவை 

575 > நான்கு அறிவு உயிரினங்கள்: 

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே;  
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.  


நண்டு, தும்பி ; "பிறவும் உளவே" = ஞிமிறு (தேனீ) , வண்டு

576 > ஐந்து அறிவு உயிரினங்கள்: 

மாவும் மாக்களும் ஐஅறிவினவே;

பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.

பறவைகள் , நான்கு கால் விலங்குகள் ; "பிறவும் உளவே" = எட்டு கால் விலங்குகள் :))

577 > ஆறு அறிவு உயிரினங்கள்

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே;
பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே.


மனிதர்கள் ஆறு அறிவு உடையவர்கள் ; 

ஒரு twist இருக்கு பாருங்க இங்க ; இதுலயும் "பிறவும் உளவே" சொல்லுறாரு .

அது என்னனா சில வகை குரங்குகள் , கிளி , யானை :)))

இன்னும் நிறைய இருக்கு தொல்கப்பியத்துல.. அப்ப அப்ப பாக்கலாம் :)))

படிச்சுட்டு பிடிச்சா சொல்லிட்டு போங்க (Comments)

நன்றி . வணக்கம் . 
ஆசிப் 

17 comments:

  1. Romba sooper Aasif...😊 super like!

    ReplyDelete
  2. மிக அருமை. நன்றி

    ReplyDelete
  3. அருமையான தகவல் மிக்க நன்றி

    ReplyDelete
  4. மிக அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தொல்காப்பியர் இருபதாயிரம் வருடத்திற்க்கு முந்தியவர்,

    நன்றி,

    ReplyDelete
  7. Super pls describe deeply about tholkappiyam

    ReplyDelete
  8. சிறப்பு.. அன்பான நன்றி..

    ReplyDelete
  9. அருமையான விளக்கம்

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  11. தமிழர்கள் ஞானியர்....

    ReplyDelete